Home சினிமா ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு.. இன்று விசாரணை

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு.. இன்று விசாரணை

0

வேட்டையன்

ஞானவேல் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

சமந்தாவை பற்றி சர்ச்சை பேச்சு.. எழுந்த கடும் கண்டங்கள்! மன்னிப்பு கேட்ட அமைச்சர்

தொடரப்பட்ட வழக்கு

இந்நிலையில், வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை படம் ரிலீஸ்க்கு முன் நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும், அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version