Home இலங்கை அரசியல் நாட்டின் பிளவுகளைக் குறைக்க பாடுபட்ட தலைவர் சம்பந்தன்: ரணில் இரங்கல் செய்தி

நாட்டின் பிளவுகளைக் குறைக்க பாடுபட்ட தலைவர் சம்பந்தன்: ரணில் இரங்கல் செய்தி

0

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஒரு தேசியத் தலைவராக நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் (R.Sampanthan) மரணம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இழப்பு நாடு முழுவதும் இரங்கல்

மேலும் தனது இரங்கல் செய்தியில் தெரிவிக்கையில், இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார்.

அவரது இழப்பு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version