Home இலங்கை அரசியல் ரணில் தலைமையில் விசேட கூட்டம் – மைத்திரியும் பற்கேற்பு

ரணில் தலைமையில் விசேட கூட்டம் – மைத்திரியும் பற்கேற்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய ஜனநாயக முன்னணியின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கொழும்பு 07, மல்வீதிவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார்.

அரசியல் நிலவரம்

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version