Home இலங்கை அரசியல் ரணிலின் வைத்திய நடவடிக்கை தொடர்பில் வெளியான விசேட அறிக்கை

ரணிலின் வைத்திய நடவடிக்கை தொடர்பில் வெளியான விசேட அறிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அலுவலகம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விசேட அறிக்கை

குறித்த அறிக்கையில்,

அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

சிகிச்சை முடிந்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  அலுவலகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version