Home இலங்கை சமூகம் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ரத உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ரத உற்சவம்

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் ரத உற்சவம் இன்று ( 20/06/2024) வியாழக்கிழமை காலை வசந்த மண்டப பூசைகளுடன் இடம்பெற்றது.

அம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று  மூன்று மூர்த்திகளும் உள்வீதி எழுந்தருளி பின்னர் வெளி வீதி எழுந்தருளி தனித் தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி நயினாதீவு நாக பூசணி அம்மனுக்கு ரத உற்சவம் இனிதே இடம்பெற்றது.

பூங்காவனத் திருவிழா

16 தினங்களை கொண்ட இவ்வாலாய பெருவிழா, கடந்த (07/06/2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று (14ம் நாள்) 20ஆம் திகதி வியாழக்கிழமை தேர் உற்சவமும் ( 15 ம் நாள்) 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.

அத்துடன், மறுநாள் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவம் நடைபெற உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/rathotsavam-nainai-nagapoosani-amman-temple-1718871983

NO COMMENTS

Exit mobile version