Home இலங்கை சமூகம் கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்

கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்

0

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ்அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால்
வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து
விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச்
செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய
பதவிகளிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக
அறியமுடிகின்றது.

கடிதத்தின் மூலம் அறிவிப்பு

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும்
இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம்
ஆகியோருக்கு 24.06.2025ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும்
மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version