வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் ஆதரவுடன், தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் இணைந்து தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பாதை
அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையில் பல இடங்கள் வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்துள்ளன.
அதன்படி, அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகளுக்கு வன்னி இராணுவ அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
