இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெட்டிகுமார கருத்து தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு
கடந்த 2012 இற்கு பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3000 ஊழியர்கள் 2031 இல் அத்தியாவசிய ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆட்சேர்ப்புச் செயற்பாடு இதுவரை இருந்த முறைகேடுகளை நீக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
