Home இலங்கை சமூகம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

0

அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயலுமானால் அனைத்து தொடருந்து சேவைகளினதும் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட பின்வாங்கப் போவதில்லையென தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தமது கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைக்குமென நம்புவதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத் தெரிவித்துள்ளார்.

தேவையான தீர்மானங்கள்

இல்லாவிடில் இன்று மாலை இடம்பெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படுமென தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி விலக்கல் கடிதங்கள்

இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், துணை தொடருந்து நிலைய அதிபர்கள் உட்பட சுமார் ஆயிரம் தொடருந்து ஊழியர்களுக்கு பதவி விலக்கல் கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version