கண்டியில் மகாவலி ஆற்றின் இருபுறமும் உள்ள கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்டி, பேராதெனிய மற்றும் கன்னொருவ ஆகிய இடங்களில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆற்றின் இருபுறமும் உள்ள பல கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
