Home முக்கியச் செய்திகள் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் தொழிற்சந்தை: உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு

றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் தொழிற்சந்தை: உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு

0

மே தினத்தை முன்னிட்டு வடக்கில் பிரபல சுற்றுலாத் தலமான றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மாபெரும் தொழிற்சந்தை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வுகள் சித்திரை மாதம் 30 ஆம் திகதி றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெறவுள்ளன.

வேலைவாய்ப்புகளை பெற ஆர்வமுள்ளவர்கள் நேர்கமுகத் தேர்வுகளின் போது கீழுள்ள ஆவணங்களை கொண்டுவர வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

  • சுயவிபரக்கோவை

  • ஆள் அடையாள அட்டை பிரதி
  • பிறப்புச் சான்றிதழ் பத்திரம்
  • பிரதி கிராம சேவகரின் நற்சான்றிதழ் பத்திரம்
  • தொழில் அனுபவ கடிதம்
  • கல்வித் தகைமை பத்திரங்கள்

அதன்படி, இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாக றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகத்தினரால் குறித்த தொழிற்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலதிக தொடர்புகளுக்கு – 077 777 2353..

Source: https://ibctamil.com/article/reecha-organic-farm-job-vacancies-1713870568?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version