நுரைச்சோலை மின்சார உற்பத்தி மையத்தின் முதல் உற்பத்தி பிறப்பாக்கி நாளை 8 ஆம்
திகதி முதல் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அது மீண்டும் தேசிய மின்சார உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்படும்
என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
2025 ஜூன் 13 ஆம் திகதி முதல் பராமரிப்புக் காரணமாக இந்த மின்சார உற்பத்தி
பிறப்பாக்கி 25 நாட்களுக்கு செயலிழந்திருந்தது.
எனினும் குறித்த பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில்,குறித்த பிறப்பாக்கி, மீண்டும் தேசிய மின்சார உற்பத்தி
நிலையத்துடன் இணைக்கப்பட்டவுடன், தேசிய மின் உற்பத்தி நிலையத்துக்கு 300
மெகாவாட் மின்சாரத்தை அது வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
