Home இலங்கை சமூகம் அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வாகனங்கள் மீண்டும் கையளிப்பு

அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வாகனங்கள் மீண்டும் கையளிப்பு

0

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் 

இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய  குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் 03 வாகனங்களும் தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள் மீளக் கையளிக்கப்பட்டன.

 

 

NO COMMENTS

Exit mobile version