Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய மில்லியன் கணக்கான டொலர்கள்!

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய மில்லியன் கணக்கான டொலர்கள்!

0

முந்தைய ஆண்டை விடவும் 2024 செப்டம்பரில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் தொகை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது, மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் செப்டம்பர் 2023 இல் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.

மொத்தப் பணம்

இந்த நிலையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்தப் பணம் 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version