Home இலங்கை சமூகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஒரு வழிப்பாதை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஒரு வழிப்பாதை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த ஒரு வழிப்பாதையே இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு

கரந்தகொல்ல – 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகக் குறித்த வீதி கடந்த 14 ஆம் திகதி அதிகாலை முதல் மூடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல்.உதயகுமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மலையக பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மீண்டும் மண்சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version