Home இலங்கை சமூகம் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வட – கிழக்கில் தொடரும் அடக்குமுறைகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வட – கிழக்கில் தொடரும் அடக்குமுறைகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

0

ஆட்சி மாற்றம் நடைபெற்றதற்கு பிற்பாடும் எந்தவிதமான மாற்றமும் வடக்கு கிழக்கில் இடம்பெறவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (24) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எத்தனையோ வேட்பாளர்கள் தமது முகப்புத்தகத்திலே சட்டவிரோதமான முறையிலே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், என்னுடைய கையிலே எந்தவிதமான துண்டுப்பிரசுரங்களும் இல்லாது நின்று கொண்டிருந்த வேளையிலே எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், யார் யாரை திட்டமிட்டு இந்த ஆட்சியாளர்கள் குறிவைக்கிறார்கள் என்ற விடயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,   

NO COMMENTS

Exit mobile version