Home இலங்கை சமூகம் யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna), பார்வைக்குறைபாடுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று (03.02.2025) மாலை இடம்பெற்றுள்ளது. 

 உடற்கூற்று பரிசோதனை

குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80 வயதான ராஜசுந்தரம் கமலாதேவி என்ற
வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக
மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version