Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தியில் விபத்து – வாகன சாரதி கைது

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தியில் விபத்து – வாகன சாரதி கைது

0

யாழ். (jaffna) தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.9.2024) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி காவல்துறையினரால் கைது

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும்,
எதிர்த்திசையில்
பயணித்த கெப் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஹெயஸ் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவிப்பதற்கு காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version