Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு விமான நிலையம் குறித்து பரவிய வதந்தி

மட்டக்களப்பு விமான நிலையம் குறித்து பரவிய வதந்தி

0

மட்டக்களப்பு விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக இன்று (21.09.2024) மாலை தொடக்கம் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது. 

இது தொடர்பில் விமான நிலையத்தின் அதிகாரியொருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பான செய்தி என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

விமான நிலையத்தின் வெளியே இருந்த குப்பைக் கிடங்கு தீ மூட்டப்பட்டுள்ளதால், அப்பிரதேசம் எங்கும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

தவறான தகவல்

அதன் காரணமாக விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவியுள்ளது என்றும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version