Home உலகம் அறுகம்பே அச்சுறுத்தல்: ரஷ்யா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அறுகம்பே அச்சுறுத்தல்: ரஷ்யா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் (Russian Embassy in Sri Lanka) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் போது, ரஷ்யர்களை விழிப்புடன் இருக்கமாறும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறுகம்பே பகுதியில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை காவல்துறை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு

இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.

அறுகம்பே பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version