Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்: சஜித் வாக்குறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்: சஜித் வாக்குறுதி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்

“திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும்” என தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/sajith-may-day-speech-at-colombo-1714574651

NO COMMENTS

Exit mobile version