Home விளையாட்டு ஓய்வை அறிவிக்கப்போகும் இலங்கை கிரிக்கெட் அணி தலைவி

ஓய்வை அறிவிக்கப்போகும் இலங்கை கிரிக்கெட் அணி தலைவி

0

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தனது அணியை இறுதி ஆரம்ப சுற்றுக்கு தகுதி பெறுவதே தனது இலக்கு என்று கூறியுள்ளார்.

நாளை முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறந்த வீராங்கனை

சாமரி அத்தபத்து தான் ஓய்வுபெறப்போகும் திகதியை தற்போது குறிப்பிடவில்லை. எனினும் வெகு விரைவில் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த  தென் ஆபிரிக்கா மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக, சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல், 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 26 நான்கு ஓட்டங்கள் உட்பட 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற 3ஆவது அதிகபட்ச ஒட்டம் இதுவென்பதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை உமிழும் அதிசய எரிமலை… எங்கே உள்ளது தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version