Home ஏனையவை ஆன்மீகம் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம்

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம்

0

யாழ்ப்பாணம், நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் பக்தர்களின் தீவிர முயற்சியில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான திருவிழாவின் பத்தாம் திருவிழாவான நேற்று(22)
காலை 9:00 மணியளவில் நாகர்கோவில் கடற்கரையில் சமுத்திர தீர்த்தம் இடம்
பெற்றுள்ளது.

வழமையாக அதிகாலையில் 4:00 மணியளவில் ஆலயத்தில் வசந்த மண்டப பூசைகள் இடம்
பெற்று 5:00 மணியளவில் சமுத்திரத்யில் சுவாமி தீத்தமாடுதல் வழமையாகும்.

ஊரடங்கு உத்தரவு

நேற்றைய முன்தினம்(21) ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றுள்ள நிலையில் இரவு பத்து
மணியிலிருந்து அதிகாலை 6:00 மணிவரை ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்ததனால் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று முன்தினம்(21) இரவு இடம்பெற்ற
திருவிழா இடைநிறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்று(22) காலை 6:00 மணியிலிருந்து ஊரடங்கு
உத்தரவு தளர்த்ப்பட்ட பின்னர் சமுத்திர தீத்தமாடுதல் நடாத்தப்படுவதற்க்கு
உபயகாரர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6:00 மணியிலிருந்து
நண்பகல் 12:00. மணிவரை ஊரடகக்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலய சமுத்திர தீத்த உற்சவ உபயகாரர்களால் நாகர்கோவில் கடலில்
சமுத்திர தீத்தமாடுவதற்கு மருதங்கேணி பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும், உபயகார்களில் சிலர் தீத்த
உற்சவம் இடம்பெற்றால் முரண்பாடு ஏற்படும் என பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து சமுத்திர தீத்தம் ஆடுவதற்க்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆலயத்தில் கூடியிருந்த உபயகார்கள், பக்தர்கள்
பொலிஸாருடன் முரண்பட்டு சுவாமி சமுத்திர தீத்தம் ஆடும்வரை ஆலய சூழலை விட்டு
அகலமாட்டோம் ஏன் விடாப்பிடியாக நின்ற நிலையில் மருத்தங்கேணி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியால் காலை 8:30 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டு 9:00 மணியளவில்
நாகதம்பிரான் நாகர்கோவில் சமுத்திரத்திரத்தில் தீத்தமாடியுள்ளார்.

மேலும், இந்த தீர்த்த உற்சவத்தில் நாகர்கோவில் கிராம மக்கள், உட்பட வடமராட்சி, வடமராட்சி கிழக்கு
பக்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version