Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்ததால் வருத்தப்பட்டேன், ஆனால்?- நடிகை ஓபன் டாக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்ததால் வருத்தப்பட்டேன், ஆனால்?- நடிகை ஓபன் டாக்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் சீசன் அண்ணன்-தம்பியை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது.

முதல் சீசன் முடிந்த கையோடு 2வது சீசன் தொடங்கப்பட அப்பா-மகன்கள் பற்றிய கதையாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 2வது சீசனிற்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது சூடு பிடிக்க ஒளிபரப்பாகிறது.

சரண்யா துரடி

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசனில் ரசிகர்களால் வெறுக்கப்படும் கதாபாத்திரமான தங்கமயில் வேடத்தில் நடித்து வருபவர் சரண்யா துரடி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது, அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.

இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வேண்டுமா என யோசித்தேன், இதற்கு முன் நடிக்க கதாபாத்திரம் எல்லாமே போல்டான கேரக்டர் தான்.

தங்கமயில் எப்படி யோசித்து பிறகு சரி என்று நடிக்க தொடங்கினேன். நடிக்க தொடங்கியதும் நெகட்டீவ் கமெண்ட் வர அப்பா இதில் நடிக்க வேண்டுமா என கேட்டார்.

முதலில் தங்கமயிலாக நடித்தது வருத்தமாக தான் இருந்தது, ஆனால் கொஞ்ச நாள் போகட்டும் என்று யோசித்தேன். நான் பொறுமையாக இருந்தது இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version