Home இலங்கை அரசியல் மின்சார சட்ட மூலம் குறித்து நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு

மின்சார சட்ட மூலம் குறித்து நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு

0

 மின்சார சட்ட மூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது.

இந்த உத்தேச சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் விசேட நாடாளுமன்ற அமர்வுகளின் பேர்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரசபை சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக காணப்படுவதாக அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version