Home இலங்கை சமூகம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கப்படும் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (24) உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி விடுத்த உத்தரவு

இந்த மனு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு, மனுவில் உள்ளவற்றை சரிபார்க்க நவம்பர் 18-ம் திகதிக்கு அழைப்பு விடுக்க உத்தரவிடப்பட்டது.

மாணவர்கள் குழு பெற்றோருடன் இணைந்து மனு

குறித்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்று தமது பெற்றோருடன் இணைந்து இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/scholarship-examination-issue-1729790252

NO COMMENTS

Exit mobile version