Home இலங்கை கல்வி மாணவர்களிடையே அதிகரிக்கும் தவறான பழக்கம்.. அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!

மாணவர்களிடையே அதிகரிக்கும் தவறான பழக்கம்.. அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!

0

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசேட குழு.. 

1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கப்படுகின்றனர். 

25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில், போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version