Home இலங்கை சமூகம் பாடசாலை சென்ற மாணவிகள் மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை

பாடசாலை சென்ற மாணவிகள் மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை

0

மொனராகலையில்(monaragalle) உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும் மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றனர்.

குறித்த இரண்டு பிள்ளைகளும் நேற்று (19) பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

அதமலேவெவ வெரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரும், தொம்பகஹவெல இண்டிகசெல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version