Home சினிமா நீயெல்லாம் கடவுளா? செல்வராகவன் விவாகரத்து வதந்திக்கு நடுவில் போட்ட பதிவு

நீயெல்லாம் கடவுளா? செல்வராகவன் விவாகரத்து வதந்திக்கு நடுவில் போட்ட பதிவு

0

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக தான் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். குணச்சித்திர ரோல்கள் மட்டுமின்றி ஹீரோவாகவும் நடிக்கிறார்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் என்றும், அதனால் அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

செல்வராகவன் பதிவு

இந்நிலையில் செல்வரகவான் X தளத்தில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

“திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.
அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.”

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், செல்வராகவன் குடும்பத்தில் என்ன நடந்தது என்று தான் கேட்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version