Home முக்கியச் செய்திகள் மலசல கூடத்தில் தயாரித்து விற்கப்பட்ட உணவு – தமிழர் பகுதியில் சம்பவம்

மலசல கூடத்தில் தயாரித்து விற்கப்பட்ட உணவு – தமிழர் பகுதியில் சம்பவம்

0

மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24.03.2025) மட்டக்களப்பு (Batticaloa) – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான நேற்று பொதுசுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை

இதன்போது, ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து
விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாத காலம் சிறையில் அடைக்குமாறு 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதி ஓரத்தில் கொள்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[0KJTTVK
]

https://www.youtube.com/embed/ZxAAI1vjakU

NO COMMENTS

Exit mobile version