Home இலங்கை குற்றம் தெஹிவளையில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் : முதல் நாளிலேயே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

தெஹிவளையில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் : முதல் நாளிலேயே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

0

தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் தங்க சங்கிலி, காப்பு, மோதிரங்கள் உட்பட 50,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் உள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கொள்ளை

பத்திரிகை ஊடாக பணிப்பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மூத்த சகோதரி ஊடாக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் எதுவுமின்றி தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் வழங்கி பணியை ஆரம்பித்ததாக விசாரணைகளில் தெரியவந்துளளது.

அன்றைய தினம், வீட்டு உரிமையாளரின் மனைவி இரண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை

மேலும் மனைவியின் தந்தை மற்றும் தாயார் மட்டும் வீட்டில் இருந்ததால், மனைவியின் தந்தை வீட்டு உரிமையாளரான மருமகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பணிப்பெண் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சந்தேகம் ஏற்பட்டு மேல் மாடியை சோதனையிட்ட போது தங்கம் மற்றும் பணம் அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

தங்கப் பொருட்களுக்கு மேலதிகமாக 45ஆயிரம் ரூபாய் பெறுமதியான Apple Air Pods இரண்டையும் அவர் எடுத்து சென்றள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version