யாழ். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட
‘வெளிச்சத்தின் விளக்கு’ குறுநாடகம்
சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு ஏழு விருதுகளையும் வென்றுள்ளது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச
நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் விருது வழங்கும்
நிகழ்வு – 2024 அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஹனிதம சுனில் செலெவி
தலைமையில் நேற்று(13.12.2024) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட
‘வெளிச்சத்தின் விளக்கு’ குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம்
இடம் பெற்றது.
ஏழு விருதுகள்
அத்துடன், சிறந்த நாடக நெறியாள்கையிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் சிறந்த
நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த இசையமைப்புக்கான விருது
என ஜந்து விருதுகளைப் பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் சிறந்த குறுநாடகம் என்ற விருதையும்
பெற்றதோடு சிறந்த குறுநாடகத்தை அளிக்கை செய்த திணைக்களம் என்ற பாராட்டுச்
சிறப்பு விருதையும் பிரதேச செயலாளருக்காகக் கையளிக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலகம் நேற்றைய நிகழ்வில் மொத்தமாக ஏழு விருதுகளைப்
பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
