Home இலங்கை சமூகம் சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள தொடருந்து பெட்டிகள்!

சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள தொடருந்து பெட்டிகள்!

0

12 தொடருந்து பெட்டிகள் சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தொடருந்து பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருத்த பணிகள்

தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக திருத்த பணிகள் தாமதமடைவதாகவும் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரத்மலானையில் உள்ள தொடருந்து தளத்திற்கு திருத்த வேலைகளுக்காக தொடருந்து பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version