Home சினிமா 10 வருடம் மேல் ஆகியும் குழந்தை இல்லாதது ஏன்?.. கேள்வி கேட்டவர்களுக்கு சாந்தனு, கிகி பதிலடி

10 வருடம் மேல் ஆகியும் குழந்தை இல்லாதது ஏன்?.. கேள்வி கேட்டவர்களுக்கு சாந்தனு, கிகி பதிலடி

0

சாந்தனு

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகம் காட்டி பிரபலமானவர் பாக்யராஜ்.

வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பாக்யராஜ் மகன் சாந்தனு.

பின் நாயகனாக சக்கரகட்டி திரைப்படத்தில் அறிமுகமாக படம் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.
பின் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சாந்தனுக்கான பெரிய வெற்றிப்படம் இன்னும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

குழந்தை

சாந்தனு, சினிமாவில் அறிமுகமான பின் தான் காதலித்து வந்த பிரபல தொகுப்பாளினி கிகியை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கிகி தனியாக 2 நடன நடனப்பள்ளிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் தொடங்கியுள்ள யூடியூப் பக்கத்தில் பலரும் 10 வருடங்கள் ஆகியும் ஏன் குழந்தை இல்லை என கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளனர்.

அதில் அவர்கள், எல்லோரும் எங்களிடம் குழந்தை எப்போது பிறக்கும் என கேட்கிறார்கள்.

எங்களுடைய குழந்தைகளை நீங்களா கவனித்துக் கொள்ள போகிறீர்கள்? நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால் எங்களுடைய குழந்தைகளை நீங்கள் வளர்த்துக் கொடுக்கப் போறீங்களா? என்று கிகி கேட்டிருக்கிறார்.

நாங்கள் இப்படி பேசுவதை பார்த்து நீங்கள் திமிராகவோ ஆணவமாகவோ பேசுகிறோம் என்று நினைக்காதீங்க.
எங்களுடைய வலி வேதனையை தான் நாங்கள் இப்படி சொல்கிறோம்.

இப்படி நொய் நொய் என்று இவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு மன அழுத்தம் தான் வருகிறது.

கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும் என பேசியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version