Home இலங்கை சமூகம் ஏன் நான் ஊடகத்துறையை தெரிவுசெய்தேன்: மனம் திறந்த சர்மிலா வினோதினி

ஏன் நான் ஊடகத்துறையை தெரிவுசெய்தேன்: மனம் திறந்த சர்மிலா வினோதினி

0

ஊடகத்துறையில் பன்முக ஆளுமையைக் கொண்ட ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரம், அவர்களின் வரலாற்றுப் பதிவுகள் காலம் கடந்தும் போற்றப்படுவதற்கான அடையாளமாகும்.

குறிப்பாக, தமது இனம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் பொதுப் பிரச்சினைகள் ஆகியவற்றின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளையும் வியப்புகளையும் கண்டறிந்து, அவற்றை மக்கள்மயப்படுத்தும் ஆளுமைத்திறன் ஒரு அபூர்வமான சிறப்பாக விளங்குகிறது.

சமூகத்தின் குரலாக மாறி, காலத்தின் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் இந்த ஊடகவியலாளர் பண்பு, ஊடக வரலாற்றில் நிலையான தாக்கத்தை உருவாக்குகிறது.

அந்தவகையில் இலங்கையின் ஈழத்தில் பிறந்து ஊடகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, அன்மையில் ஜனாதிபதி விருதை எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்காகப் பெற்றுக்கொடுத்து தடம் பதித்திருக்கும் சர்மிலா வினோதினி தமது ஊடக பயணத்தின் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆளுமைகொண்ட அவர் தனது ஊடகபணியில் எதிர்கொண்ட சவால்களையும் சாதனைகளையும் தொடரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளார்…

https://www.youtube.com/embed/pHefmGgucTs

NO COMMENTS

Exit mobile version