அவிசாவளையில் (Avissawella) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலையில் அவிசாவளை – கொஸ்கம (Kosgama) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுதுவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய விசாரணை
இந்த சம்பவத்தில் தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபர் என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த மூவரும் அவிஸ்ஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவர்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
