Home இலங்கை சமூகம் கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

0

கொழும்பில் (Colomco) முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16.10.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 ஒருவர் பலி

குறித்த நபர் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த போது இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய மிஹிஜய பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/OcFOwYScmvo

Source: https://ibctamil.com/article/shooting-in-grandpass-colombo-1-dead-1729077561

NO COMMENTS

Exit mobile version