ஹிக்கடுவ, மலவன்ன பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று(01.09.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
