Home உலகம் ஓமானில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி: பலர் காயம்

ஓமானில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி: பலர் காயம்

0

ஓமானிய (Oman) தலைநகர் மஸ்கட்டில் உள்ள பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த  துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கிதாரி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விசாரணையின் ஒரு பகுதியாக சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

இதேவேளை, அமெரிக்கர்களை இந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு ஓமானில் உள்ள அமெரிக்க (United States) தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அரேபிய தீபகற்பத்தில் வளைகுடாவின் வாயிலில், மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஓமானில் இத்தகைய வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version