Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு

0

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, தொடங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வீட்டின் ஜன்னல் மீது 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அதிரடி படையினர்

எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு அதிரடி படையினர் அழைக்கப்பட்ட நிலையில், களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/shooting-targeting-a-house-in-dodangoda-1736903039

NO COMMENTS

Exit mobile version