சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, அனந்தி, மகேஷ் என மொத்த பேரும் தற்போது ஏற்காட்டிற்கு சென்று இருக்கின்றனர். அங்கு ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் வில்லி துளசி. ஆனால் அவரது பல முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.
மறுபுறம் அன்பு – ஆனந்தி நெருக்கமும் இந்த ட்ரிப் மூலமாக அதிகரித்து இருக்கிறது. யாரையும் நம்ப மாட்டேன் என ஆனந்தி கூறினாலும், அன்புவுக்கு இன்னும் நெருக்கமாக தான் சென்று கொண்டிருக்கிறார்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் எல்லோரும் சென்று ஒரு அருவியில் குளிக்கின்றனர்.
அப்போது ரகு சென்று அந்த அருவியை பார்க்கிறார். அங்கு ஆனந்தி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். அவர் சிக்குவாரா? ப்ரோமோவை பாருங்க.
