Home சினிமா சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்த பரபரப்பான கதைக்களம், உண்மை வெளிவருமா?… புரொமோவுடன் இதோ

சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்த பரபரப்பான கதைக்களம், உண்மை வெளிவருமா?… புரொமோவுடன் இதோ

0

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.

அப்படி ஒரு தொடர் தான் சிங்கப்பெண்ணே, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த பெண்ணின் போராட்டத்தை மையப்படுத்திய கதையாக அமைந்தது.

கடந்த சில வாரங்களாக முக்கோண காதல் கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த கதையில் யார் யாரை காதலிக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்து பெரிய பூகம்பமே வெடித்தது.
ஆனால் மகேஷின் கோபத்தை போக்க அன்பு-ஆனந்தி சில விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

புரொமோ

காதல் பிரச்சனை ஒருபக்கம் இருக்க இப்போது ஆனந்தி பிரச்சனை வந்துள்ளது. அதாவது அவர் திடீரென மயங்கி விழ அன்பு ஏன் அவருக்கு இப்படி ஆகிறது என பயப்படுகிறார்.

ஆனந்தி அடிக்கடி வாந்தி எல்லாம் வருகிறது என கூற மருத்துவர்கள் முழிக்கிறார்கள்.
இதனால் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் அமையும் அல்லது அவருக்கு வயிற்றில் ஏதாவது பிரச்சனை இருப்பது போன்ற கதைக்களம் அமையும் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/singappenne-serial-promo-21-mar-2025-1742540168

NO COMMENTS

Exit mobile version