Home இலங்கை அரசியல் சிங்கள தலைவர்களை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் – ராஜ்குமார் ரஜீவ்காந்

சிங்கள தலைவர்களை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் – ராஜ்குமார் ரஜீவ்காந்

0

இந்த தேர்தலில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை காணப்படுவதாக சமூக அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்ட முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியாளர் மாநாட்டில் இன்று (19.06.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மிக நீண்டகாலமாக தமிழர்கள் தங்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் தங்களுக்கு எதிராக தொடரும் ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்வு தொடர்பிலும் பேரினவாத அரசுகளோடு போராடி தற்போது ஒரு விரக்தி மனோநிலையை அடைந்துள்ளனர்.

இதனால் இந்தத் தேர்தலில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்களத் தலைவர்களை நாம் புறக்கணிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

Source: https://tamilwin.com/article/sinhala-leaders-should-be-boycotted-in-elections-1718811548

NO COMMENTS

Exit mobile version