Home இலங்கை சமூகம் யாழில் சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்..! வலைவீசும் மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழில் சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்..! வலைவீசும் மனித உரிமைகள் ஆணைக்குழு

0

யாழில், (Jaffna) உதவி செய்யும் முகமாக இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் “SK vlog“ என்ற யூரியூப் தளத்தின் உரிமையாளர் தொடர்பிலான விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (Human Rights Commission Of Sri Lanka) கோரியுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி குறித்த நபர் பல காணொளிகளை வெளியிட்டு
வருகிறார். 

அதிகமாக புலம்பெயந்தோரிடம் பணத்தைப் பெற்று இந்தச் செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான வார்த்தைப்பிரயோகம் 

இந்நிலையில் யாழில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது, அங்கிருந்த மாணவி தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு

எனினும் அந்த மாணவி அதற்கு மறுத்ததால் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களால் குறித்த யூடியூபர் அவரையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

மேலும் குறித்த யூடியூபரின் நடத்ததை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/NDmcGavBAIs

NO COMMENTS

Exit mobile version