Home இலங்கை அரசியல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை

0

மோசமான வானிலைக்குப் பிறகு இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க 1.8
மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியுறவு
அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் கார்மென் மொரேனோவிற்கும், இலங்கையில்
உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் (ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து,
ருமேனியா) தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிதியின் ஒரு பகுதி, சர்வதேச
செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு
அவசர நிதியின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version