Home இலங்கை குற்றம் ஊடகவியலாளரை தாக்கிய படையினருக்கு எதிராக 17 ஆண்டுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை!

ஊடகவியலாளரை தாக்கிய படையினருக்கு எதிராக 17 ஆண்டுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை!

0

 ஆயுதப்படைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12 பேர் மீது, அடுத்த வாரம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி, இந்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

குற்றச்சாட்டுகள்

2008 மே மாதம் தெஹிவளையில் உள்ள தம வீட்டுக்கு அருகில் இருந்து, நொயர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட17 ஆண்டுகளுக்குப் பின்னர்,இந்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

கொலை முயற்சி, கடத்தலுக்கான சதி, தாக்குதல் மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 30 குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

Source: https://tamilwin.com/article/soldiers-who-attacked-the-journalist-charge-sheet-1747576339

NO COMMENTS

Exit mobile version