Home இலங்கை சமூகம் தாமரை மலர் பறிக்கச் சென்ற பாலகனுக்கு நேர்ந்த துயரம்

தாமரை மலர் பறிக்கச் சென்ற பாலகனுக்கு நேர்ந்த துயரம்

0

அட்டமலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொராத்துப்பிட்டி ஏரியில் தாமரை மலர்களை பறிக்க சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அட்டமலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

அட்டமலை மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் 04ஆம் ஆண்டில் கல்வி கற்கும் வீரசிங்க முத்யன்சேல, அட்டமலை பண்ணை பொல வீதியைச் சேர்ந்த மதிஷ தனுவன் (09) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிந்ததும் தாமரை பறிப்பதற்காக

பாடசாலை முடிந்ததும், உயிரிழந்த சிறுவன் மேலும் மூன்று நண்பர்களுடன் தாமரை பறிப்பதற்காக தொராதத்துபிட்டி ஏரிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவே வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பாதாள அறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு

மாலை வரை வீடு திரும்பாத சிறுவன்

இறந்த சிறுவனுடன் வந்த நண்பர்கள் எவருக்கும் நடந்த சம்பவத்தை சொல்லவில்லை. மாலை 5.45 வரை தனது மகன் வீட்டிற்கு வராத நிலையில், பல சிறுவர்கள் ஏரியை நோக்கி சென்றதாக அயலவர்,தந்தையிடம் தெரிவித்தார்.

மஹியங்கனை கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

பின்னர், அயலவர்களுடன் ஏரிக்கு சென்ற சிறுவனின் தந்தை, ஏரியின் நடுவில் உள்ள கிணற்றில் அவரைக் கண்டு, உடனடியாக அட்டமலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அதற்குள் சிறுவன் உயிரிழந்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version