Home இலங்கை சமூகம் இன நல்லிணக்கத்திற்காக தென்னிலங்கை மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இன நல்லிணக்கத்திற்காக தென்னிலங்கை மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

0

இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நேற்றைய தினம் (29.06.2024) தென்னிலங்கை மாணவர்கள்
வடக்கின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவின் (Karu Jayasuriya) சூரிய கற்கை நிறுவனத்தில் இரண்டாம்
மொழியாக தமிழ் மொழியினை கற்கும் சிங்கள மாணவர்களே வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள கற்கை
நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன் பொழுது, தமிழ் மரபின் படி குறித்த மாணவர்கள் வட்டுக்கோட்டை இரண்டாம் மொழி
நிறுவகத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் ஆரத்தி எடுத்து
வரவேற்கப்பட்டனர்.

விருந்தினர்களது உரை

அதனைத் தொடர்ந்து, விருந்தினர்களது உரை இடம்பெற்று மதிய போஷன நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. பின்னர் மாணவர்களும் விருந்தினர்களும் கலை
நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வுகளில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யசோதை சரவணபவன், முன்னாள் சபாநாயகரின் சூரிய கற்கை நிறுவனத்தின்
இயக்குநர் ஜெயதிலக்க மற்றும் சூரிய நிறுவி இணைப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான தெ.உதயரூபன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version