Home இலங்கை அரசியல் அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று தீர்மானம்

அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று தீர்மானம்

0

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளினால் அருண ஜயசேகரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூட உள்ளது.

இதன் போது எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் தனது நிலைப்பட்டை வெளிப்படுத்த உள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியாது என சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான வகையில் சபாநாயகர் செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

NO COMMENTS

Exit mobile version