Home இலங்கை குற்றம் துப்பாக்கிதாரிகளை உடனடியாக கைது செய்ய தயாராகும் விசேட மோட்டார் சைக்கிள் படையணி!

துப்பாக்கிதாரிகளை உடனடியாக கைது செய்ய தயாராகும் விசேட மோட்டார் சைக்கிள் படையணி!

0

புதிய இணைப்பு 

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யவும், இலங்கையின் தென் மாகாணத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும்
துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக செயற்படவும் இவ்வாறு விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விசேட மோட்டார் சைக்கிள் படையணி 

பொலிஸ் அதிகாரி கித்சிரி ஜெயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாரியக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களை கைது செய்வதில், தாமத
நிலை ஏற்பட்டுள்ளதாக, வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிரிவில் 23 மோட்டார் சைக்கிள்கள் செயற்படவுள்ளதுடன் தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுகளில் சுமார் 46 அதிகாரிகள் இந்த நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளனர். 

மேலதிக தகவல்: இந்திரஜித் 

முதலாம் இணைப்பு 

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் இந்த மோட்டார் சைக்கிள் படையணியின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய இவ்வாறு விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் இந்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படையணியில் சுமார் 46 பேர் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/special-byke-unit-for-police-1748451823

NO COMMENTS

Exit mobile version